செவ்வாய், 28 ஏப்ரல், 2020

உபன்னியாசம்

உபந்நியாசம் என்பது ஓர் அழகிய சொல். இதை வேறுசொல்லால் உணர்த்த வேண்டின் " உரை "  அல்லது சொற்பொழிவு என்று சொல்லலாம்.

உரை என்னும் இதன் பொருளை மூன்று சிறு சொற்களால் திறனுடன் வேய்ந்துள்ளனர், இதில்  மையச் சொல் "பன்னுதல்"  (பன்னு) என்பதாகும்.

பன்னுதல் என்றால் திரும்பத் திரும்பச் சொல்லுதல்.  இதன் அடிச்சொல் பல் > பல என்பதாகும்.

பல் > பன் > பன்னு(தல்). பன்னு என்பதில் இறுதி உகரம் சாரியை. தல் என்பது தொழிற்பெயர் விகுதி.  சொல்லை மிகுத்துக்காட்டுவது விகுதி.  மிகுதி> விகுதி. மகர வகரப் போலி.

உ-பன்னு என்பதன் முன் நிற்பது உகரச் சுட்டு.  உகரச் சுட்டு தமிழில் எண்ணிறந்த சொற்களில் வரும்.  உன் என்ற சொல்லில் முன் இருப்பது உ என்ற சுட்டு  ஆகும்.  உத்தரவு என்பதிலும் உ+ தரவு என்று உகரமே முன் நிற்கிறது. முன்னுள்ள மேலாளன் தருவது உ தரவு  ஆகும். உத்தரவு என்பதில் தகர ஒற்று (த்)  சந்தி.

உ பன்னி, அதாவது ஒரு கூட்டத்தின் முன் நின்று சொல்லி,  ஆயது  ஆயம்.  ஆய + அம்.  ஆய > ஆச. ய >ச. திரிபு.உ பன்னி + ஆய + அம்.  உபன்னியாசம்.  ஆய என்பது ஆச என்று வருவது யகர சகரப் போலி.  
Aya (ஆய )may appear like a participial form but such has been used in Pali and other languages. Here it has induced a better effect. Using a root word in explanation may not bring forth the under

standing.


வேறு எ-டு:   நீர் பாய அன் அம் > நீர்ப்பாசனம் என்பதுபோல்.   வாயல் > வாசல் என்பதுபோல்.  வாயில்,  ஆனால் வாயல் என்ற சொல் அமைந்திலது.

உ பன்னு இயை ஆய  அம் எனினுமாம்.  உபன்னியாயம்.உபன்னியாசம்.

வாழ்க நலமுடன்.

Some changes made 30.4.2020

கருத்துகள் இல்லை: