வெள்ளி, 10 ஏப்ரல், 2020

பகீரதன் முயற்சியின் நடைமுறைப் பொருத்தங்கள்

பகீரதன் என்பவன் கங்கையை  வானிலிருந்து பூமிக்குக் கொண்டுவந்தான்.
மக்கள் யாவரும் போதுமான நீர்பெற்று மகிழ்ச்சியாய் வாழவேண்டுமென்பதே நோக்கம்.மக்கள்பால் அவன் கொண்ட பரிவே அதற்குக் காரணம்.

இவன் ஒரு  பார்த்திபன்.  பாரிலே மிக்கத் திட்பம் உடையமன்னன்.

பார் + திட்பம்  >  பார் + திட்பன்
இது இடைக்குறைந்து டகர ஒற்று (ட்) மறைந்துவிட்டால்
இதுவே பார்த்திபன் ஆகிவிடுகிறது.  த் என்பது புணர்ச்சியில் விளைந்தது.

திட்பம் :  மனவுறுதி. செயலில் விடாமுயற்சியும் கெ ட் டி த் தன்மை யும்.


எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்

என்பதும் உண்மையே ஆகுமன்றோ?

யாரைப் பார்த்திபன் எனல் வேண்டு மெனின்  பாரில் திட்பம் உடையனாகி
எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியனையே.

உண்மையில் " பகிரதன் "  ஒரு பகிர் + அது + அன். அவன் முயன்று முடித்த ஒன்றை மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்.

இனிப் "பகீரதன்" என்பது:

பகு+ ஈர் + அது + அன் >  பகுத்து, மக்களை ஈர்த்து, அது ( அவன் பெற்றதை),  அன்:  அளித்தவன்.  இது ஒரு காரணப்பெயர். இதன் காரணங்கள் தமிழ் மொழியிற்றான் அமைந்து கிடக்கின்றன.

இது  அது  அல்லது   து என்னும் இடைநிலை பெற்று அமைந்த சொற்கள் பல.
எ-டு:
கணி + து + அம் = கணிதம்
பரு + அது + அம் = பருவதம் (மலை).
சுர + ஒண்( மை  ) + இது  + அம் = சுரோணிதம்.
"ஊறு சுரோணிதம் மீது கலந்து"
----- பட்டினத்தார்

வினைச்சொற்கள்: கணித்தல், பருத்தல்,
சுரத்தல்

சிலர் பகீரதன் அல்லது‌ பகிரதன்
என்று ஒருவன் இருந்ததில்லை என்று
நினைக்கலாம்.. அவன்      இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. சொல்லை ஆய்வது தான் எம் வேலை.
இருந்தானா இல்லையா என்பதன்று.

Dear reader:   This post has been hacked by mischief makers.
We have partly restored it.
Some errors resulting from their intrusion have been rectified.
Dear intruder ,  if you do not like the contents please give your reasons or give your own etymology
in the comments column. It is OK for us.
Thank you intruder.

கருத்துகள் இல்லை: