வியாழன், 23 ஏப்ரல், 2020

ஜென்மாவும் சென்மமும்

ஆங்கில அறிவோ தமிழறிவோ கூட இல்லாத படிக்காதவர்களை அண்டி, அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் குறிப்பெடுத்துக்கொள்வது  ஆய்வுக்கு உதவும். ஆனால் இப்போது கல்வியறிவு ஓரளவு பரவிவிட்டதாலும் ஓரமைம்பது நூறாண்டுகளின் முன் இவர்கள் எப்படிப் பேசினார்கள், என்பதைத் தொகுத்துவைக்க யாரும் முன்வரவில்லை என்பதாலும் இவை இப்போது மறைந்துவிட்டன என்றுதான் கூறவேண்டும். இவ்வாறான தொகுப்புகள் கிட்டவில்லை.. சில குறிப்புகள் கிட்டலாம்.

உரையாடல்களும் நகருக்கு நகர் வேறுபடுவனவாய் உள்ளன.

சிங்கப்பூரில் பண்டிருந்த தமிழர்கள், சில் மலாய்ச் சொற்களை மொழிபெயர்த்த விதம் வியக்கத் தக்கதாய் உள்ளது.  இவற்றைப் பாருங்கள்:

மலாய்                                                 மொழிபெயர்ப்பு.
போத்தோங்க்    பாசிர்                    மண்ணுமலை  (மண்வெட்டு மலை )
ஜபாத்தான் மேரா                            சிவப் பாலம் (  சிவப்பு என்பதில் பு விடுபாடு,)
கம்போங் கப்பூர்                               சுண்ணாம்புக்  கம்பம்
கொலம் ஆயர்                                   தண்ணீர்க் கம்பம்
புக்கிட் தீமா                                          ஈயமலை 
சுங்ஙாய் காலாங்                              செங்கமாரி ஆறு
கண்டங் கிருபா                                  மாட்டுக் கம்பம்

கம்பம் என்பது  சிற்றுர்  (பொருள்) .  கம்போங் என்பது மலாய். மேல்  இவற்றில் சில நேரடி மொழிபெயர்ப்பாய் இல்லை.

இதிலிருந்து பண்டைத் தமிழர்கள் பெரும்பாலும் சொற்களைக் கடன்வாங்கிப்  பேசுகிறவர்கள் அல்லர் எனலாமா? ஆங்கில அறிவு மேம்பட்ட காலை இது மாறிவிட்டது.

பிறவி என்று பொருள்படும் ஜன்மம் என்பதற்குச்  சிற்றூரார் சென்மம் என்றுதான் சொன்னார்கள் என்று தெரிகிறது.  செல்+ ம் + அம் =  சென்மம், சென்றுவிடுவது,  அழிந்துவிடுவது என்பதாம்,  ஜன்ம என்பது பிறப்பையும் சென்மம் என்பது முடிவையும் காட்டின. இவை இருவேறு சொற்கள் என்பது தெளிவு, ஆனால் அவை ஈடாய் வழங்கின.

செல்லுதல் நடைபெறுவது:  1. உயிரானது கருவினுள் செல்லுதலும் அதை உயிர்ப்பித்தலும்;   2.  பின்னர் உயிர்த்த கரு வளர, அது முற்றிக் குழந்தை ஆகி, கருவினின்று வெளியுலகிற்குச் செல்லுதல்,  இது இரண்டாவது செல்லுதல்,  3. முதுமையில் உடலினின்று பிரிந்து அகண்ட வெளியில் செல்லுதல். இதைத்தான் சாவு, மரணம் என்று சொல்கிறோம்   4. மறுபிறவி உளதாக, இன்னொரு கருவினுள் புகுந்து உயிர்த்தல்.

இவ்வாறு ஒவ்வொரு கட்டமும் ஒரு "செல்"  ஆகிறது.  இந்தச் செல்களில் கருவிலிருந்து குழந்தையாகி வெளியுலகிறகுள் புகுதலின்பின் அவ்வுடலை விட்டு ஏகுதல் ஏற்பட ஒரு சென்மம் ஆகிறது. ஆதலின் சென்மம் என்று சிற்றூரான் சொல்வது சரியானது என்று உணர்க. 

தட்டச்சு பிறழ்வு பின் கவனம்பெறும்.


கருத்துகள் இல்லை: