புதன், 8 ஏப்ரல், 2020

அபத்தம்

இனி அபத்தம் என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.

இதிலிருப்பவை இரண்டு உள்ளீட்டுச் சொற்கள்.

அவி + அற்று என்னும் இரண்டையும் மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.

இந்த அபத்தமென்னும் திரிசொல் அதன் முந்துவடிவத்தில் அவத்தம் என்று இருந்தது.  வகர பகரப் போலியைப் பின்பற்றி  இது பிற்காலத்தில் அபத்தம் என்று திரிந்துவிட்டது.  வகரம் பகரமாவதை  > 1. வகு > பகு 2. வசந்த > பசந்த் முதலிய வற்றால் அறியலாம். பகர வகரப் போலிகள் இந்திய மொழிகள் மட்டுமின்றிப் பிறமொழிகட்கிடையும் காணக்கூடியவை.   ( Not language-specific).  இத்திரிபு பல இடுகைகளிற் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது.

அவியாகி அற்றுப்போவது அவத்தம்.  அற்று என்ற செந்தமிழ் வடிவம் பேச்சுமொழியில் அத்து என்று வரும்.

அன்றியும் சொல்லமைப்பில் இது காணக்கிட்டுவதே ஆகும்.   பல்+ து > பற்று > பத்து என்ற எண்ணுப்பெயர் காண்க.   ஒன்பதின்பின் எண்ணிக்கை பலவாகிவிட்டதென்று நினைத்த தமிழன்,  பல் (பல) + து ( ஆனது)( ஆயின)
என்ற சொல்லை உண்டாக்கிக்கொண்டான்.  ஆயிரம் என்ற சொல்லின் அமைப்பையும் கண்டுணர்க.  பல்+ து = பற்று > பத்து .  ஒருபஃது, இருபஃது என்ற சங்ககாலச் சொல்வடிவங்களையும் நினைத்துக்கொள்க.  இன்னும் தொற்று > தொத்து, சிற்றம்பலம் > சித்தம்பலம் முதலியவும் அறிக.  உறவு அத்துப்போய்விட்டது என்ற சிற்றூர்ப் பேச்சும் உணர்க.

அவத்தம் > அபத்தம்.

இதன் பொருள் பயனற்றுவிட்டது என்பதே.  இதன் ஏனைப்  பொருள்விரிகள் யாவும் இம்மூலக் கருத்தினின்று பெறப்பட்டன.  ஏற்புடையவாறு பொருளுரைத்துக்கொள்க.

கருத்துகள் இல்லை: