ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

மரம் சாய்த்தலும் சாதித்தலும்

சாதித்தல் என்பது சாய்த்தல் அடிப்படையில் மரம்வெட்டும் பழங்குடியினரிடம் வழங்கித் தமிழேறிய சொல் என்பதை யாம் முன்னர் சிலமுறை வெளியிட்டுள்ளோம். பிற குடியினருக்கு மரவேலை இல்லை. தச்சர் என்போர் வெட்டிக் கொணர்ந்த மரத்தைச் சரிசெய்வோர் ஆவர்.

இயலாத ஒன்றைச் செய்து முடித்திடலாம் என்று போய் அதில் தோல்வி கண்டவனை " போனாயே, சாய்க்க முடியவில்லையோ?" என்று கேட்பதை நீங்கள் கூர்ந்து கவனித்திருக்கலாம்.

சாய்த்தல் > சாய்தித்தல் > சாதித்தல்.  இங்கு யகர ஒற்று கெட்டுச் சொல் அமைந்தது.

இவ்வாறு யகர ஒற்று மறைந்த இன்னொரு சொல்:

வாய்> வாய்த்தி > வாத்தி.  (வாய்ப்பாடம் சொல்பவன் அல்லது ஆசிரியன்).. ஆர் விகுதி இணைப்பது பணிவு காட்டுதற்கு.

இதை விரித்தெழுதிய இடுகை, வெளியிட்டுள்ளேம்.

ஆங்கிலத்தில் "கோர்ஸ்" என்ற சொல் கடலில் கலம் செலுத்துவோர் வழங்கிய (nautical term) சொல்.  அதுபோல் இது மரம் சாய்த்தோர் வழங்கிய சொல். பிற்காலத்தில் பொதுவழக்கில் வந்து விட்டது.

இதுவும் காண்க.

ஒற்று மறைந்த சொற்கள்)

https://sivamaalaa.blogspot.com/2019/08/blog-post_29.html 

கருத்துகள் இல்லை: