ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

"அபராதம்"


இப்போது  "அபராதம்"  என்பதைக்  கவனிப்போம்

அவம் என்பது  அவ > அப  என்று   நின்றது.  அவமாவது கெடுதல் பொருள் தருவதொரு சொல்.

இனி ராதம் எனற்பாலது.

இறுத்தல்  -  "காசு கட்டுதல் "  அல்லது  பணம் கட்டுதல்.

இறு +  அது + அம்  = இறதம்  >  றதம் >  ரதம் > ராதம் .

அது என்பது   சொல்லாக்க இடை நிலையாக  வருமென்பது   பருவதம் (< பரு ), ,   காவதம்  (<கா )  என்பனவற்றில் காண்க. ( இது என்பதும் கொள்க     சுரோணிதம்(<சுர ) கணிதம் (<கணி, கணித்தல் )   )

அப +  ராதம் = அபராதம்  (தண்டம் )  ஆகும். Having to pay a fine is bad for your purse. It is naturally "avam". That's why this word started with "apa-"

இஃது தமிழ் மூலங்களையுடைய ஒரு சொல்.

அவமாகப்  பணம் இறுத்தல் என்பது.

நன்கு   திரித்துப்    புனையப்பட்ட  சொல்.

அவி + அம்  = அவம்  -    முன் இடுகைகளில் காண்க

"அவ இறதம்"  எனில் அஃது ஒரு சொன்னீர்மைப் படாமை அறிக.  "அவவிறதம்"  எனில்  இன்னா ஓசை தரும் .  இவையெல்லாம்  நல்லிசைப்  புலவன்மார் புனைதக்க வல்ல.









கருத்துகள் இல்லை: