புதன், 23 ஏப்ரல், 2014

தேர்தல் கலை

 இந்தியப் பெருந்தேர்தல்  --- கள்ளம்
 இல்லாப்  பொதுமக்கள்!---சொல்லால்
 வந்து பொழிந்திடுவார் ‍‍‍‍‍‍‍‍‍;--- வேட்பர்
 வயம்தமை   இழந்திடுவர்.

 எங்கும் நடப்பதுபோல்  --- தருவார்
 தம்முறுதி  மொழிகள்‍--- களத்தில்
 தங்கி  உழைப்பவர்போல் --- தோன்றின்
 வென்றி விளைப்பவரே!

 தேர்தல்  போனபின்னே  ‍‍‍‍--- சொன்னவை
 தேற வில்லை யென்றால் --- அதுவும்
 யார்தம்  குற்றமையா ‍‍‍---  அதுவே
 தேர்தல் கலையல்லவோ!

 மீண்டும்  வேறொருவர் ‍‍‍‍--- தம்மை
 மேற்கொண்டு செல்வதன்றி  ‍‍--- ஞாலம்
 யாண்டும்  வேறுவழி ---- இல்லார்
 யாது     தலைப்படுவார்?‍‍



வேட்பர்   ==  வேட்பாளர்.   
சொல்லால் வந்து (உறுதிமொழிகளைப்) பொழிந்திடும்  வேட்பாளர் வயம்  தம்மை இழ ந்திடுவர் என்ற படி.  சொல்லாடும்  திறம்  கூறியது. 
 வென்றி ==  வெற்றி.
மேற்கொண்டு -   தேர்ந்தெடுத்து.
தலைப்படுவார்? =  செய்ய இயலும் ? என்பது 





கருத்துகள் இல்லை: