புதன், 16 ஏப்ரல், 2014

வந்தனை

வினைப் பகுதியிலிருந்து தொழிற் பெயர்களை அமைத்தலே தமிழ் முறையாம். ஆனால் பிற மொழிகளில் எச்ச வினைகளிலிருந்தும் (1)  பெயர்ச் சொற்களை அமைப்பதுண்டு. இப்படித் தமிழில் அமைந்தவை ஒரு சிலவே ஆம். இதை நாம் முன்பே அறிந்துள்ளோம்.

ஒருவர் நம் வீட்டுக்கு வருகிறார் என்றால், "வா'ங்க வா'ங்க" என்போம். செய்யுள் நடையில் "வந்திடுவீர், வந்திடுவீர் "  என்றோ "வருக வருக"   என்றோ சொல்லும் பழக்கம் பெரும்பாலும் நம்மிடம்  இல்லை எனலாம்.
 எங்ஙனமாயினும் வந்தவரை  வணக்கத்துடன் அழைக்கும் பண்புடையார்  தமிழரெனின் மிகையன்று.

 இப்பண்பு பிறரிடத்து இல்லையென்பது பொருளன்று .

இப்போது விடையத்திற்கு வருவோம்.

வந்திடுக என்பதே "வந்தித்தல்" ஆகும். வருமாறு வணங்கி ஏற்றுக்கொள்ளல்.

வந்திடு > வந்தி > வந்தித்தல்.
அல்லது  வந்து > வந்தி > வந்தித்தல்.

இரண்டும் ஒன்றுதான். வந்து என்பது எச்ச வினை. (1)

வந்தி + அன்+ ஐ  =  வந்தனை.
வந்தி + அன்+ அம்  = வந்தனம்.

 அடிச்சொல்  "வா" என்பதே.

"யாம் வந்தோம்" என்பதை "யாம் வந்தனம்" என்று சொல்லலாம். நீவிர்  வந்தீர்  என்பதை "நீவிர்  வந்தனிர் " எனலாம். ஈண்டு வந்தனம் வந்தனிர்  என்பன வினை முற்றுக்கள். இவை அன் சாரியை பெற்றன.

வந்தனம் என்பது அமைந்த விதமே இங்கு கூறப்பட்டது.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.  ---- பாரதி.


கருத்துகள் இல்லை: