ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

அறிவின் பயன்

Treatment of other persons and creatures....


தமக்கு வந்த துன்பம்போல் கருதிச் செயல்படாதவிடத்து.....



அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை.

(315)

அறிவினான் = அறிவினால்; ஆகுவது = விளையும் பயன்;
உண்டோ = ஏதும் உள்ளதோ; பிறிதின் நோய் =
வேறோர் உயிரின் நோயை அல்லது துன்பத்தினை ; தம் நோய் போல் = தமக்கு வந்த துன்பம்போல், போற்றாக்கடை = கருதிச் செயல்படாதவிடத்து எ-று.

எனவே, பிற உயிர்கட்கு இன்னா செய்தலாகாது , அதுவே அறிவுடைமை என்கிறார் நாயனார்

Th14112010@51#

கருத்துகள் இல்லை: