சனி, 19 ஏப்ரல், 2014

Words of cleanliness

ஐந்து புலனுணர்ச்சிகளில் "தொட்டறிவு" (sense of touch)  அல்லது "தோலுணர்ச்சி " ஒன்றாகும். இதனை  ஊறு  என்போம்.

ஊறு  என்பதோ உறுதல் என்னும் வினையடியாய்ப் பிறந்த சொல். உறு என்பது  ஊறு என்று முதலெழுத்து நீண்டு பெயர்ச்சொல் ஆயிற்று. இப்படித் திரிந்து பெயரானவை எண்ணிறந்தவை ஆகும்.

உறத்   தக்கது, அதாவது தொடத் தக்கது தூய்மை.  தொடத் தகாதது அழுக்கு அல்லது துப்புரவு இல்லாதது.

குழந்தைப் பருவத்திலேயே நமக்கு இது சொல்லித் தரப்படுகிறது.

எனவே உறுதல் தொடத்தக்கது என்பதையும் அப்புறம் தொடத்தக்கது தூய்மையையு,ம் குறித்தன.

உறு> உது > உத்தம் > சுத்தம் என்று திரிந்தது.

உது+அம்  = உத்தம்.   (இங்கு  து+அம் = த்தம் என்றானது).

உறு + அம்  > உற்றம் > உத்தம் எனினுமாகும்.

உத்தம் > உத்தமர் . (தொடற்குரியவர்,  நல்லவர், நல்ல குணங்களை உடையவர். என்று   பொருள் விரிவு கொள்ளும்).

"தின்மை செய்பவரே --  அண்டித் 
தீண்ட ஒண்ணாதார் "

கவிமணி தேசிக விநாயகம்  பிள்ளை.  



"தீயாரைக் காண்பதுவும் தீதே" என்பதனால்,  தீயார் அல்லது  சுத்தம் இல்லாதவர், மனத்தாலும் கையாலும்  மெய்யாலும் தொடற்குரியர் அல்லர்

மொழி வளர்ச்சி என்பது கருத்து வளர்ச்சியும் அதற்கேற்ற சொல் திரிபும் ஆகும்

உத்தமர் என்பது உ+ தமர் எனவும் பிரியும். உ = முன்னிலை; தமர்  = நம் ஆள்  என்பது.  முன்னிலையாய் உள்ள நம்மவர் என்றும் பொருளாம். இப்படி இச்சொல் இருபொருள் தரும்.

"தான் என்றும் தமர் என்றும் நினைப்பதன்றித் 
தமிழ் நாட்டின் நலத்தினுக்கே உயிர் உடல்கள் 
அமைக "

--  பாரதிதாசன் 



கருத்துகள் இல்லை: