புதன், 16 ஏப்ரல், 2014

உத்தரவு

 இச்சொல் தமிழன்று என்று சொல்வாருமுண்டு.  

இச்சொல் வேற்று மொழி அகராதிகளிலும் இடம் பெற்றிருந்திருக்கக் காணப்பட்டமை ஒரு காரணமாயிருக்கலாம். ஒரு சொல் எங்கு தோன்றியிருப்பினும் அது வழங்கும் மொழிக்குரியதாக எடுத்துக்கொள்வதும் ஒரு வழியாம். எ - டு   காவல் என்பது தமிழ் ஆயினும் அது மலாய் மொழியிலும் தனியாகவும் முன்னொட்டு பின்னொட்டுகளுடனும் வலம்  வருகிறது. வழக்கின் காரணமாய் அதுவும் மலாய்ச் சொல் ஆகும். மற்றும் அது தமிழ்ச் சொல்லும் ஆகும். தமிழில் தோன்றி வழங்கியும் வருகிறது.  இப்படி  முறைப்படுத்துவதில் தவறில்லை.  இது  நிற்க.

அ ,  இ, உ  என்பன தமிழ்ச்     சுட்டுகள்.  இவற்றுள் உ என்பது முன்னிலை குறிப்பது.

தரவு  =  தரப்படுவது.  தரு+ வு  = தரவு  ஆகும்.  ஒப்பீடு: வரு + வு > வரவு.

 ,முன்னிலையாய் உள்ளவர் தருவதே உத்தரவு ஆகும்.

இது தமிழன்று என்பதற்கு காரணம் ஒன்றுமில்லை. கிடைத்துள்ள சங்க இலக்கியங்களில் இல்லாமல் இருக்கலாம். அது சரியான காரணமன்று.
இப்படியான இலக்கியங்கள்  உலகின் பல மொழிகளில் இல்லை.

கருத்துகள் இல்லை: