திங்கள், 14 ஏப்ரல், 2014

சிலை

இனிச்  சிலை என்னும் சொல்.

மனிதன் கல்லைச் செதுக்கிச் சிலைகள்  செய்யத் தொடங்கிய காலை அவை சிறியவையாய் இருந்தன. நன்கு திறன் மற்றும் செய்பொருட்கள் பெற்ற பின்பே பெருஞ் சிலைகள்  உருவாகின.

பெரிய சிலைக்குப் பெரிய கல் வேண்டும். தூக்க  ஆள் வேண்டும்.   தூக்குவோரையும் சாப்பாடு  போட்டுக் கவனித்துக்கொள்ளவேண்டும். செதுக்கப் பலர் வேண்டும் . சிறியதில் தொடங்கியதே "இயற்கை".யானது  மாமன்னர்கள் துணையின்றி  எப்படிப் பெருங்கற்களை, மற்றும்   பாறைகளைக்  கொணர்வது?

கண்ணகி சிலை  சமைக்க ஒரு பெரும்படையே போயல்லவா கல் கொண்டு வந்தது?

சில்  என்ற சொல்  சிறுமை குறித்தது  கண்டோம்.

ஆகவே  சில்   + ஐ  = சிலை   ஆனது.

பின் அது பெரிதையும் குறித்தது.

----------------------------------------------------------------------

குறிப்பு:-  சிலை என்பதற்கு வேறு  பொருள்களும் உள.



கருத்துகள் இல்லை: