செவ்வாய், 1 ஏப்ரல், 2014

நிதானம்

நிதானம்  என்ற  சொல்  மக்களிடையே பெரிதும் பயின்று வழங்குவதாகும்.
இதை வேறு சொல்லலால் குறிக்கலாமென்று "அமைதி "  அல்லது அமைதி காத்தல் என்ற சொல்லால் /     தொடரால் குறிப்பிடலாமென்றாலும் இவை நிதானம் என்பதற்குச்  சமனாக நிற்பனவா என்ற கேள்வி எழக்கூடும்.
நிதானம் என்பதில் அவ்வளவு  பொருண்மை உள்ளடங்கிக் கிடைக்கின்றதா  என்று ஆய்வதற்கிது  தூண்டுகின்றது;

நிதானம் எம்மொழிக்குரிய சொல் என்பதன்று நம் ஆய்வு.

முதலில் இச்சொல்லினுள் புகுந்து நோக்குவோம்.

நில்  எனபது கடைக்குறைந்து நி  என்று நிற்கின்றது.

அடுத்து வரும் சொல் "தானம் "  எனற்பாலது,
இது  தான்+ அம் என்ற    சிறு  சொற்கள் உள்ளிடப்பெற்றது.

பிறர்  துள்ளினாலும் துடித்தாலும்  ஓடினாலும்  ஆடினாலும் பேரொலி கிளப்பினாலும் இன்னும் உள்ள நிலையைக் குலைக்க  ஏதேது  செய்தாலும் தான்  நின்றபடி  நிற்பது என்ற கருத்தை நி(ல்)+ தான்  என்ற சொற்கள் காட்டுகின்றன.

இப்படிச்   முறைமாற்றி இட்டுச் சொற்களைப் புனதலைப் பல இடுகைகளில்  எடுத்துக்காட்டியுள்ளேன்.

அம்  என்பதை  ஓர்   இடுகையில்  விளக்கியுள்ளேன்,  அம்  ‍ஒரு  விகுதி.   அழகு என்றும்  பொருள்.

நிதானம் =   நி(ல்)  + தான் + அம்   =     தான் + நில் + அம் =  "தான் நிற்றல்  அழகு"  அதாவது   பிறர் துள்ளினால்  துள்ளட்டும்.


இதுவே நிதானம் பிறந்த கதை.  


கருத்துகள் இல்லை: