ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மக்களை ஏய்த்துவிட்டு....

மன்னரை வீழ்த்திவிட்டு
இன்னரும் மக்களை ஏய்த்துவிட்டு
படைத்தலைவர்  பாராண்ட  கதை
புவி எங்கும் புலப்படுகின்றது!
அன்று நடந்தது
இன்று  நடவாதென்று
கூறுவரோ யாரேனும்!
நாட்டுக்கொரு தலைவிதி உண்டோ?
இருந்தால்
நடந்தே  தீரும் அதன்படி
விதி என்றொன்று இல்லை என்றாலும்
நடப்பது நடக்கும்
நடந்த பின் நல்லோர் வந்து
புலனாய்வு பலசெய்து
சட்டத்தை மீறிய சண்டாளனை
தண்டிக்க  முயல்வதுண்டு!

நல்லதே நான் செய்தேன்!
நானா சண்டாளன்?
நானெப்படிக்  குற்றவாளி ??

சட்டத்தில் ஓட்டை கண்டுபிடிப்பதுதான்
ஒரு கலையாயிற்றே!

மன்னர் ஆட்சி ஆயின் என்ன?
 மக்கள் ஆட்சி ஆயின் என்ன?

ஓட்டை இல்லாத சட்டம்
உலகில் இல்லையே!\\

https://www.blogger.com/blogger.g?blogID=7941642520803533372#allposts

கருத்துகள் இல்லை: