புதன், 2 ஏப்ரல், 2014

துணை நிற்போம்

வீடுகள் பொருள்கள் மற்றும்
விழைந்திடும்  ஆடு மாடு
நாடிடும் அழிவை என்று
நம்பவும் கூடும் ஆமோ ?
பீடுடை கரைகள் என்றும்
பெருஞ் சுடு  கடாம் என்று
கூடின துண்டோ எண்ணம்
கொடுமையிற் கொடுமை இஃதே !

இயற்கையை வெல்லும் ஆற்றல்
இல்லையா னாலும் நாமும்
முயற்சியால் வாடும் எல்லா
முனைகளும் துன்பம் நீங்க
அயர்ச்சியே இன்றி   நி ன் றே 
அனைத்தையும் செய்ய வேண்டும்
துயர் துடைப்போம் வாருங்கள்
துணை நிற்போம் வருக நீவிர் .........

சுனாமியின் போது இயற்றிய வரிகள் இத்துடன் முற்றும்.  

கருத்துகள் இல்லை: