வெள்ளி, 25 ஏப்ரல், 2014

A day with more than 24 hours...............

பகலும் இரவுமே நீளாமலே ---  நாம் 
பார்க்கும் சோலிகள் தீராமலே,
அகலும் பொழுதுகள் ஒவ்வொன்றுமே ---  மன 
ஆறுதல் தீர்த்ததே என்றென்றுமே! 

 ( In   some countries of the world:-  )

அதிகாரிகள் வந்தே  ஆணையிட்டார் ---  ஆனால் 
அன்றாட வேலைகள் கோணவிட்டார்!
நதி  நீரும்  குடி நீரும் பஞ்சமென்பார்  --- மக்கள் 
நாடியும் பெற்றவை  கொஞ்சமென்பார் 

-----

.அலுவலர் மணிமுள்ளை நீட்டிக்கணும்  ---  அந்த 
ஆண்டவன் வந்திதை கேட்டுக்கணும்;
பகலவன்  நாள் நீட்டித் தந்துவிட்டால்  --- இன்பம் 
பாரெங்கும் கதவினை வந்துதட்டும்


ஒரு நாள்  இருபத்து  நான்கென்பதை  ----  இனி 
ஊரார்க்கு  நாற்பத்தி எட்டாக்கணும்;
இரு நாள் செய்வதை ஒரு நாளிலே ---. செய் தால் 
இன்பமே   எங்கணும் வரு  நாளிலே

கருத்துகள் இல்லை: