திங்கள், 28 ஏப்ரல், 2014

பால் part

பாற்று என்ற சொல் அமைந்த விதம்:

பால்+ து = பாற்று.

ஏல் என்ற வினை வினை எச்சமாகும்போது: ஏற்று என்று வரும்.

எ-டு: ஏற்றுக் கொண்டாள்.
ஏல்+து = ஏற்று.

கால் என்ற பழந்தமிழ்ச்சொல் "நீட்சி" குறிப்பது.

கால்+து = காற்று. ( நீண்டு வீசுதலை உடையது).

இனி பால்+து என்பது இருவகையாகப் புணரும்.

பால்+து = பாற்று.
பால்+து = பாலது.
பால்+மை+அது = பான்மையது.
பகுதியைச் சேர்ந்தது என்று பொருள்.

ஒருமை: பாற்று, பாலது.
பன்மை: பால, பான்மைய.

பாற்று என்று வராமல், பாலது என்றும் வரும்.

"செயற்பாலது ஓரும் அறனே " என்று தொடங்கவில்லையா?

இதேபோல், 

மேல் + து = மேற்று., மேலது.
மேல் + அ = மேல (பன்மை)
மேல் + அ = மேன என்றும் வரும் (தொல்காப்பியம்).

(மேலோன் > மேனோன், மேலானவன்).0

நூல் + து = நூற்று ( "நூல் நூற்றுத் துணி நெய்தாள்" ) வினை எச்சம். "நூற்று".



TWD 21062009@53#

கருத்துகள் இல்லை: