ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தத்து

இச்சொல் எவ்வாறு அமைந்தது என்பது காண்போம்.

தன் + அது =  தனது.

ஒரு குழந்தையைத் தனது ஆக்கிக் கொண்டனர் அந்தத் தம்பதியர்.

ஒரு குழந்தையைத்  தனதாய் எடுத்துக்கொண்டனர்.  ""     "" .


இந்த வாக்கியத்திலிருந்து  ஆய்வைத் தொடங்குவோம்.

தன்  + அது
தன்  +  து.
த      + து.   =  தத்து.

தத்து  என்ற  சொல்லில்   னகர ஒற்றும் அ எனும் எழுத்தும்   மறைந்தன.

அகரச் கட்டு  மறைவது பல சொற்களில் உண்டு.

உடையது  :    உடைத்து.

"அன்பும் அறனும் உடைத்தாயின் ......."  குறள்.  உடைத்து என்பது இலக்கியத்தில் காணப்பெறும் வழக்கு.

அது என்பதில் அ ,  சுட்டு, து என்பது அஃறிணை ஒன்றன்பால் விகுதி.

தத்து என்ற சொல்லமைப்பில் சுட்டு தேவையில்லை.  இங்கு எதையும்  சுட்டி  அடையாளம் காட்டவில்லை.  It has been rightly discarded.

தன்  என்பது   "தற்"   என்று  புணர்ச்சியில் திரிதல்.  எ-டு   :  தற்காலிகம்,   தற்காலம், தற்போது,  தற்பவம், தற்சமம்   எனப்பல. எனவே,  தற்,  >  தத்  என்ற ஒலியுடன் தமிழ்ப் பேசுவோர் ஒத்துப் போகக் கூடியவர்கள்.

தன்  து  >  தற்- து  >  தத்து. இலக்கணம் ஒத்துப் போகாவிட்டாலும்  இந்த ஒலிமாற்றத்துடன் தமிழர் செல்வதில் ஏதும் தடை இருக்காது.

தத்து என்பது பேச்சு வழக்கில் வந்த திரிசொல் ஆகும்,

continued in the  next post.


குறிப்பு:  21.11.2019-ல் காணப்பட்ட மாற்றங்கள் சில
திருத்திச் செப்பம் செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை: