சனி, 5 ஏப்ரல், 2014

சாவடி

இப்போது இந்தியத் தேர்தல் வெகு விரைவாக வந்துகொண்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் பயன்படுத்தும் ஒரு சொல்லையாவது நாம் ஆராயவேண்டாமா?

அதற்காக நாம் இன்று நுணுகி நோக்கப்போவது  "சாவடி " என்னும் சொல்.  எங்ஙனம் அமைந்தது என்று அச்சமின்றி நோக்குவோம். காரணம் வைப்புத்தோகையை நாமொன்றும்   இழந்துவிட  மாட்டோம்.

சாவடி என்பது தலை போன சொல். அது  கல்வெட்டுக்களில் "உசாவடி "  என்று வந்துள்ளது.  உசாவுதலாவது  கேட்டறிதல்.  அடி என்பது  யாரையும் தாக்கச் சொல்வதன்று .   அடு +  இ =  அடி.  அடுத்துச் சென்று (கேட்டறி)  என்பதாம். அடுத்தல் -  அருகிற் செல்லுதல்.

இதை  முன் ஓர்  இணைய தளத்தில் ஆதாரத்துடன் எழுதியிருந்தேன்.  அது இப்போது கைவசம் இல்லை.  இருப்பினும் இதுதான் சொல்லவிழைந்தது ஆகும்.

சாவடி நல்ல தமிழ்ச் சொல்  ஆகும்.

சாவடி என்பது வேறு.  "சாகடி" என்பது வேறு.

கருத்துகள் இல்லை: