வியாழன், 10 ஏப்ரல், 2014

அத்தியாயம்.

முன் இடுகையில்  நாம் "அத்தியாயம் " என்ற சொல்லினைக் கண்டோம். இதற்குமுன் இதைப்பற்றிய ஒரு விளக்கம் எழுதியிருந்தேன்.  எங்கென்று தேடவேண்டும். இந்த இடுகையில்  இச்சொல் குறிக்கப்பட்டுள்ளது    .http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_10.html 

ஒரு  நூலில் ஒரு பகுதி முடிந்து, அதே நூலில் இன்னொரு பகுதி தொடங்கினால்  இது அடுத்த அத்தியாயம் என்போம். இதை ஆங்கிலத்தில் chapter என்பர் : இது உங்களுக்குத் தெரியும் .

இதற்கு ஒரு சொல் புனைந்து பார்க்கலாம்.

ஒரு பகுதி அற்றது.  அதாவது முடிந்தது. இருந்தாலும் நூல் இன்னும் முடியவில்லை. அடுத்த பகுதி அதனோடு இயைகிறது.

அற்று (ஒன்று முடிந்து)
இயை  (இன்னொன்று இயைகிறது).
அம்  என்ற விகுதி கொடுப்போம்.

அற்று + இயை + அம் .

ஆனால் பேச்சு வழக்கில் நாம் அற்று என்பதை அத்து என்றல்ல்லவா சொல்கிறோம்?

ஆகவே, 

அத்து+ இயை +அம் = அத்தியையம் .

யையையை என்று வந்தால் வாய்க்குத் தடையாய் உள்ளது. ஆக, யை என்ற எழுத்தைத் தூக்கி எறிக.  அதற்கு பதில் "யா"  போடுக.

ஆக,   அத்தியாயம்.

நன்றாக  இருக்கிறதா ?


Note:   I may look for my old writings when I have the time.  Some forums where I wrote them have closed down. Web masters gone, perhaps for good.  I too have to spend time looking for my own records. There are data charges too incurred. The best is to write anew.  If you have read it before, please bear with me.
I will edit later,

கருத்துகள் இல்லை: