வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நோய்நுண்மிக்கு எதிராக ஒன்றுபடுவோம்.

 சிங்கைப் பெருநகரிலிருந்து:


போன எமச்சளிநோய் ---  இங்கு 

புகுந்தது மீண்டுவந்தே,

மானை நிகர்த்த உலா ---- வந்தோர்

மாண்டது துன்பமையா.


என்று தொலையுமிதே ---  சனியன்

என்று மனம்பதைத்தோம்,

நன்று செயவெளியில் ---  போக

நடுங்கி அடங்கிவிட்டோம்.


மன்றுகளிற்  கூடிப்  ---  பேசி

மனித உறவுமிக,

இன்று விழைவதுவோ ---  இல்லா

ஏழையர் நாமாகினோம்.


கன்றுநல்  ஆபிரிந்தே --- படுதுயர்

கனவிலும் வேண்டாததே,

ஒன்று  படநின்றே---  இத்துயர்

ஒழித்திட ஓடிவாரீர்.  


சிவமாலையின் கவிதை.


பொருள்:

எமச்சளிநோய் ---  கோவிட்  ( முடிமுகி,  மகுடமுகி)

துன்பமையோ என்று எழுதி, இப்போது துன்பமையா என்று

வந்துள்ளது.  இதுவே நன்றாக இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.

சனியன் என்றது இந்த நோயை.

செய -  செய்ய. (தொகுத்தல் விகாரம்).

மன்று - மக்கள் கூடுமிடங்கள்.

மனித உறவு -  படக்காட்சி அது காட்டப்படும் கூடங்களில் பார்த்தல்,

விளையாhttps://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_3.htmlட்டுத் திடல்களில் கூடல்,  உணவகங்களில் கூடல் முதலிய

தொடர்புக் கூடுகைகள்.

ஏழையர் -  எளியவர்கள்.

கன்றுநல் ஆ  -  பசுவைக் கன்று (பிரிதல்),  இறத்தல் முதலியவை.


சனி ( சனியன்  ஆண்பால் விகுதிபெற்றது  மக்கள் பயன்பாட்டில்). இதுபற்றிய இடுகை உங்கள் வாசிப்புக்கு:

தனி -  சனி  திரிபு.

https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_3.html

https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_24.html

தங்கு > சங்கம் திரிபு

https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_46.html



கருத்துகள் இல்லை: