வியாழன், 16 செப்டம்பர், 2021

சிங்கப்பூர் கோவிட்நிலவரம்

 [Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 17]


செப்டம்பர் 16, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 837 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 77 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 98.2 விழுக்காட்டினருக்கு மிதமான அல்லது அறிகுறிகள் ஏதும் இல்லை; 1.6 விழுக்காட்டினருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 0.1 விழுக்காட்டினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்; 0.0 விழுக்காட்டினர் உயிரிழந்தனர். 

  

செப்டம்பர் 15 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 82 விழுக்காட்டினர் முழுமையாக/இரண்டு தடுப்பூசிகளைப்  போட்டுக்கொண்டுள்ளனர்; 84 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.


செப்டம்பர் 16 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 910 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh160921

கருத்துகள் இல்லை: