செவ்வாய், 14 செப்டம்பர், 2021

வினாயகற்குரிய தினத்தில் பிறந்தநாளும் வந்தது.

 


பிறந்தநாள் வாழ்த்து விநாயகர்க்கும் மற்றுமே

சிறந்தவா  சிரியர்  குமரன்பிள் ளைக்குமே

திருவார்க்குக் கிடைத்தது  மோதகம் வடைகளே

திறலார்க்குச் சர்க்கரைத்  திண்சீமை அப்பமே.

திருவார்  அருள்தரப் பொருள்தந்த பிள்ளையே.

பிள்ளையார் காக்கப் பிள்ளையவர் வாழ்கவே.


[ கோவிட் காரணமாக பிறந்த நாள் விழாவிற்கு ஒருவரே அழைக்கப்பட்டு,  அவரும் முதியவர் ஆனதால்,  பச்சைவெள்ளம்  பருகினார், சீனி அதிகம் அதனால் திண்ணப்பத்தைக் குமரன் பிள்ளைக்கே ஊட்டினார் .  கோவிட்காலம்  ஆனாலுமே சிறப்பாய்   முடிந்தது, ]

குறள்வெண்பா:

விழாவை ஒடுக்கியே கொண்டாடின் வாழ்வோம்

பலாப்போல் சுளைப்பயன் பெற்று.


பொருள் :  விநாயகற்கும் -- ( இது விநாயகனுக்கும் என்பதை

சுருக்கும் முறை.   0ன்+ கு  = ற்கு. ).  விநாயகர்க்கும் எனின் அது

பலர்பால் வடிவம் .

குமரன் பிள்ளை -  பிறந்த நாள் கொண்டாடியவர்.

திருவார் - திருவுடையவர்,  விநாயகர்.

திறலார் -  திறன்கள்  உடைய  பிறந்தநாள் கொண்டாடும் திரு குமரன்.

சர்க்கரைத் திண்சீமை அப்பம்:   "கேக்". இது படத்தில் உள்ளது.

திருவார் அருள்தரப் பொருள்தந்த பிள்ளையே -   இது  பூசை செய்யப் பொருள் தந்ததைத் குறிக்கிறது.  தந்தவர் பிறந்த நாள் கொண்டாடியவர்.

பச்சைவெள்ளம் -  வெறும் பச்சைத்தண்ணீர்.  தண்ணீரைப் பச்சைவெள்ளம் என்று வேடிக்கையாகக் குறிக்கின்றார் கவி. வழக்கில் வெள்ளம் என்பது நீர்ப்பெருக்கு.  ஆனால் தமிழினமொழி வழக்கு வேறுபடுகிறது.

குறள்வெண்பாவின் பொருள்:

பலாப்பழம் அப்பெயர் பெற்றது பல சுளைகள் உடைமையால், 

பல் ( பல) + ஆ = பலா.   ஆவென்பது இங்கு விகுதி. இன்னொரு காட்டு: 

தல்+ ஐ = தலை

தல் + அம் = தலம்

தல் + ஆ =  தலா.  

உல் + ஆ >  உலா.  உல் என்பது சுற்றுதல் குறிக்கும் சுட்டடிச் சொல்.

பலாப்போல் சுளைப்பயன் என்பது:  பலாப்பழம் சுளைகள் பாதுகாப்பாக  உள்ளே கட்டமைக்கப் பட்டுள்ளன.  ஒன்றுக்கு ஒன்று தடுப்புகள் உள்ளன.  வெளித்தோலும் பாதுகாப்புத் தருகிறது.    எனவே, இதன் அமைப்பு,  பழங்களுக்குப் பாதுகாப்பாகும். அதுவே பயன். கோவிட் காலத்தில் பலர் இருக்க, பலாவுக்குப் போல் பாதுகாப்பு வேண்டும்.


அறிக மகிழ்க

மீள்பார்வை செய்யப்படும்.

 







கருத்துகள் இல்லை: