செவ்வாய், 7 செப்டம்பர், 2021

வசீகரித்தல் வசீகரம்.

 இன்று வசீகரம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்

இந்த ஆய்வைச் சுருக்கமாகவே முடித்துவிடலாம்.

வசம் என்ற சொல்லை நாம் முன்னரே அறிந்துள்ளோம்.  இதன் முன்வடிவம் வயம் என்பது.

ஓர் ஈயைப் பிடித்துத் தேனுக்குள் விட்டால், ஈ உடனே தேனின் வயமாகி விடுகிறது.  எதை எங்கு இடுகின்றோமோ  அது அவ்விடத்து வசமாகி விடுகிறதென்பதே உண்மை.  ஓர் ஆடவனைப் பிடித்து ஒரு பெண்ணிடத்துத் தந்தால்,  அவ்வாடவன் அப்பெண்ணினால் ஏற்றுக்கொள்ளப் படுவானாயின்,  அவன் அவள் வயப்பட்டு  விடுகிறான். சிலர் அப்புறம் அப்பா அம்மாவைக் கூட மறந்துவிட்டு, அவளே கதி என்று கிடந்துவிடுகிறார்கள். கதி என்று கிடத்தலினாலேதான் பதி என்ற பெயர் அவனுக்கு ஏற்பட்டது.  அவன் பெண்ணிடத்திலும் அவள் வீட்டாரிடத்திலும் பதிந்து கிடப்பதனால் "பதி" ஆகி, அவ்வீட்டிலே தன்னைப் பதிந்துகொள்வதனால் அவன் ஆங்குப் பதிகின்றான் என்று சொல்கிறோம்.  பதி பின் வதியாக,  வதி வசியானது.  ( த- ச போலி).

வை :  வைத்தல்.  

வை > வய் > வயம் > வசம்.

ஆண் ஈர்க்கப்பட்டதால்,   வச +  ஈர்.

ஈர்க்கப்பட்டு,  அருகில் சென்று விடுகிறான்.

வச + ஈர் + கு +  அரு. + இ.

ஈர் என்பது இகரச் சுட்டில் வந்த சொல்.  இ என்பதில் மீண்டும் இகரச் சுட்டு வந்து இங்கு என்பதை உணர்த்துகிறது. 

தல் என்ற தொழிற்பெயர் விகுதியைச் சேர்த்தால்,  வசீர்கரி+ தல் > வசீ(ர்)கரித்தல் ஆகிறது.  இங்கு ர் இடைக்குறை.  ரகர ஒற்று பல சொற்களில் இடைக்குறையாகும். இன்னோர் எ-டு>  சேர்(த்தல்) > சேர்+ மி > சேமி என்பதுபோலுமே ஆகும்.   மி என்பது ஒரு வினையாக்க விகுதி.  வினையில் இன்னொரு வினை தோன்றிற்று. இதை இப்போது விரிக்கவில்லை.

இவ்வாறு,  வசீகரம் என்பது ஈர்க்கப்பட்டு வசமாவது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: