வெள்ளி, 17 செப்டம்பர், 2021

முதியோர்க்கு வழிதந்து உதவுங்கள்

 கொஞ்ச காலமாகவே கோயில்களில்  முதியோருக்காக நல்ல வசதிகள் செய்துதரப்படுகின்றன. இங்கு காணப்படும் ஒரு படத்தில், ஒரு முதியவர் நாற்காலியில் அமர்ந்தபடி கோவிலில் சாமி கும்பிடுகிறார். பேருந்துப் பயணத்தின்போதும் தொடர்மின்வண்டிப் பயணத்தின்போதும் முதியவர்கள் அமர்ந்து பயணம் செய்ய  இளையோர் வழிவிட வேண்டுமென்னும் சட்டம் அல்லது ஏற்பாடு சிங்கப்பூரில் இருக்கிறது.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகத் தொடக்கத்தில் உழைத்தவர்களை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டுமென்பது ஒரு சித்தாந்தமாகவே  இங்குத் தொடர்வது பாராட்டுக்குரியதாகும்.


கருத்துகள் இல்லை: