சனி, 18 செப்டம்பர், 2021

உயரமான கட்டிடங்களில் வாழ்கிறவர்கள்

 







வான்பதி இதுவென லாமே அடுக்குகள்

கூன்சிறி திலவென   மேலே எழுந்தன

மேம்படு மக்களே வாழ்வோர் இவற்றினில்

தாம்பெறு இன்பினைப் பாடாக் கவிகளே.


உயரம்  மேவிய கட்டிட வாழ்வினர்

அயர்வு கொள்பொழு தொட்டிய பஞ்சணை

உயரத்  தெண்ணமே எட்டாது நெஞ்சினை

நயமே நாளுமே  உற்றன  காண்பிரே


வான்பதி -  ஆகாய நகரம்

கூன் - வளைவு

மேம்படு - சிறந்த

தாம் பெறு - தாங்கள் பெற்ற

மேவிய - உள்ள

வாழ்வினர் - வாழ்கிறவர்கள் 

அயர்வு - உறக்கம்

ஒட்டிய - படுத்து உறங்கிய

எட்டாது - இவ்வளவு உயர்த்தில் உள்ளோமே என்ற பயமோ எண்ணமோ

ஏற்படாது

நயமே -  நன்மைகளே

நாளுமே - தினமும்

உற்றன - ஏற்பட்டன


.

கருத்துகள் இல்லை: