வியாழன், 16 செப்டம்பர், 2021

மக்களைக் கவராத படைப்பாளிகள் --- சிதறல்

 இவையெல்லாம் மக்களுக்கு விரித்துவைத்தேன் எடுத்துரைப்பேன்,

நவையில்லா  நற்கருத்தே  நானுரைத்தேன்  என்றிருப்பான்

அவையென்றும்  அஃதில்லா  இடங்களிலும்  எழுத்தறிஞன்;

"சுவைதந்தேன்  கற்பவர்க்கே"   எனஇவைக்கு  மகிழ்பவனாம்.


மக்களென்ற பேருலகோர்  மயங்கிவிடார் இவைகளிலே;

தக்கதிததாம்  என்பதிலே  தயங்கிநின்றே இயங்கலின்றி .

ஒக்கவுறை   தலைப்பினையே ஒருமுறைதான் பார்த்தபடி,

மிக்கபிற  பாற்செல்வார்  படைப்பாளன் உடைப்புறவே..


இந்தச் சிறுகவிதை எளிமையாக உள்ளது.  கடினமொழிகள் எவையும் இல்லை. சில சொற்களின் பொருள்:  நவை -  குற்றம்    அவை - சபை.   அஃதில்லா - சபை இல்லாத.   இயங்கலின்றி -  படித்துவிட்ட பொருளறிய முற்படுதல் முதலிய முயற்சிகள்.  ஒக்கவுறை  -  உடன் இருக்கின்ற.  மிக்க பிற -  கூடுதலான மற்றவை.. படைப்பாளன் -  எழுத்தாளன், கவிஞன் முதலியோர்.  உடைப்புற - தன் திண்மை அல்லது ஊக்கம் அழியும்படி.

 


கருத்துகள் இல்லை: