வெள்ளி, 24 செப்டம்பர், 2021

The Covid situation Singapore

[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 24]


செப்டம்பர் 23, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 163 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 97.9%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.8%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.2%

- உயிரிழந்தோர்: 0.1%

  

செப்டம்பர் 22 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 82%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%


செப்டம்பர் 23 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 1,504 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh230921 




[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 24]


வீட்டில் குணமடைதல் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 😷   


அண்மையில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு, வீட்டில் குணமடைதல் வழக்கமான பராமரிப்பு முறையாக உள்ளது . 


🔗 பரவலான கேள்விகள்: go.gov.sg/faq-24Sep-tl


1️⃣ யார் தகுதிபெறலாம்? 

2️⃣ PCR பரிசோதனையின் முடிவில் கிருமித்தொற்று இருப்பது உறுதி எனத் தெரியவந்துள்ளது. ஆனால், யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. நான் என்ன செய்வது?

3️⃣ வீட்டில் குணமடைதலின்போது எனக்கு அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்வது?

4️⃣ நானும் என் குடும்பத்தினரும் வெளியே செல்ல முடியாதெனில் மளிகைப் பொருட்களையோ மருந்துகளையோ எவ்வாறு பெறுவது?

5️⃣ உணவு பெறுதல், துணிமணி மாற்றுதல் ஆகியவற்றுக்கான தேவை ஏற்பட்டால் என் குடும்பத்தை நான் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?


📱 ஆக அண்மைத் தகவல்களைப் பெற, Gov.sg வாட்ஸ்ஆப் தகவல் இயலியைப் பயன்படுத்தவும்


🔹 சுகாதார அபாய எச்சரிக்கை ➡️ “631” எனப் பதில் அனுப்பவும்

🔹 வீட்டில் குணமடைதல், தடைக்காப்பு நெறிமுறை ➡️ “66” எனப் பதில் அனுப்பவும்

கருத்துகள் இல்லை: