ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

பிறந்தநாள் கொண்டாடிய திருமதியும் கணவரும்

 


தம்மில்தாம் மனம்பதிந்து

தம்பதிகள் தாம் இணைந்து

செம்மகிழ்வில் நனிநெகிழ்ந்து

சேர்ந்தயலார் கரையணைந்த

மம்மரிலா மண இணையர்

நமர்புகழும் ஓர்மனையர்


திருமதி ரோஷினி பிறந்த நாளில்

அவருக்கும் கணவர் பிரகாஷுக்கும்

எங்கள் வாழ்த்துகள்.


தம்மில்தாம் மனம்பதிந்து -  தாம் மனவொற்றுமையுடன்,

தம்பதிகள் - இவ்வாறு மனம் பதிந்து "தம்-பதி"களாக இணந்துவிட்ட,

செம்மகிழ்வு -  சீரான மகிழ்ச்சி.

நனி -  நன்மையான,   நெகிழ்ந்து -  அன்புகொண்டு

அயலார் கரை அணைந்த -  அயல் நாட்டில் சென்று வாழும்,

மம்மர் இல்லா மண இணையர் -   தம்முள் பேதமற்ற திருமணம் ஆன

சோடிகள்,

நமர் புகழும் -  நம் உறவினர் நட்பினர் உயர்த்திப் பேசும்,

ஓர்மனையர் - இல்லறவாசிகள்.

இவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து என்றபடி.

கருத்துகள் இல்லை: