திங்கள், 1 ஆகஸ்ட், 2016

அவதூறு

அவதூறு என்ற சொல் நாம் அவ்வப்போது காண்பதும் கேட்பதும் ஆகும்;

இதில் தூறு, பரவலாகத் தூவுதல்.  மழை தூறுகிறது என்பர். யாரையும் கெடுதலாகப் பேசுகையில்  மனிதனும் தன் சொற்களைப் பரவாலாகத் தூ(ற் )றுகிறான் அல்லது தெளிக்கிறான்.  இது ஓர் அணிவகையான வழக்கு ஆகும். தானியங்கள் அல்லது கூலங்களைக் காற்றில் தூற்றி உமி முதலியன போக்குதலும் தூற்றுதலே.  கெடுதலான  பேச்சு இதனுடன் ஒப்பிடப்படுவதுமுண்டு.

அவம் என்பது: அவி + அம்,  இதில் வி என்பதில் உள்ள இகரம் கெட்டு, வ் என்று ஒற்றாய்  நின்று, அவ்+ அம் =  அவம் என்றாகும். அவிசலான பேச்சு அல்லது தூற்றுதல்.  அவித்தல், நன்மை அழிதல்.  அவதூறு ,  அவம்பட்ட வாய்ப்பேச்சு. பிறரைத் தாழ்த்திப் பேசுதல்.  அவி = அழி,  அவி  சமை என்பது மற்றொரு பொருள்.

அவி  > அவம்

இகரம் கெட்டது போல தவம் என்பதிலும் உகரம் கெட்டுள்ளது காண்க.
தபு > தபம்;  தபம் > தவம்.  இன்னொன்று: அறு > அறம்.

தவி > தாவம் > தாபம் > தாகம். இது பன்மடித் திரிபு : அறிக. (தேவனேயப் பாவாணர்.) வி என்பதன் இகரம் கெட்டது.

Will review for changes made by third party after posting. Will edit.

கருத்துகள் இல்லை: