செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

வாடிவிடும் பூமனமே

தொண்டனெனில் தலைவன்பாங் கறிந்து செய்க;
தொல்லைவரும் இல்லையெனில் தெரிந்து கொள்க!
முண்டனைப்போல் மூர்க்கமலி நடக்கை மேவி
மூடமதி கூடிவரும் முயற்சி கொண்டால்.
கண்டபடி கழறுகின்ற உரைகள் விண்டால்,
காய்சினத்தில் தலைவனுதை  கொடுப்பான்  கண்டாய்
வண்டமரும் மலர்போலும் தலைவன் தொண்டன்;
வாடிவிடும் பூமனமே சாடல் உண்டேல். 

கருத்துகள் இல்லை: