சனி, 27 ஆகஸ்ட், 2016

எப்போதும் தென்றல்

மாலைதோறும் தென்றலுமே வந்திடுமோ==நேற்றை
மாலைத்தென்றல் இன்றுசென்றொ ளிந்ததுவோ
சோலைசென்று நன்றுறவு லாவிவந்தேன்===தளிர்கள்
சோர்வினொடு நின்றனகண் டாவிநொந்தேன்.

நாளைநானும் வந்திடுவேன் செந்தமிழின் === சுவை
நாளும்நாளும் உண்டதுபோல் வந்துமனம்
காலைமாலை யாதானும கிழ்ந்திடவே ‍=== வாழ்வு
கனிவுறவே தந்திடவி ழைந்திடுவேன்.

எப்போதும் தென்றல்



கருத்துகள் இல்லை: