செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

முயற்சியும் அயர்ச்சியும்.


எனது கடவுச்சொல்லைக் கொண்டு அல்லது மூன்றாவது நபரின் மென்பொருளைக் கொண்டு கீழ்க்கண்ட விதமாக என் கவிதைகளில் திருத்தம்  செய்துள்ளனர். அந்தத் திருத்தங்கள் பிழையானவை.

முயற்சி. இதன் வினைப்பகுதி முயல், முயலுதல். இதனோடு சி விகுதி சேர்த்தால் முயல்+ சி = முயற்சி ஆகும்,   ஆனால்

அயர்ச்சி என்பது அயர்தல் என்ற வினையினின்று வருகிறது. ஆகவே அயர்+ சி = அயர்ச்சி ஆகும்.  அயற்சி ஆகாது, காரணம் அயல் என்பது பகுதியன்று.

இதைக் கண்டு திருத்தியதில் அரைமணி நேரம் கழிந்தது. உலாவியும்
ஒத்துழைக்கவில்லை. எப்படியோ இந்த ஊடுருவல்கள் மாற்றம்பெற்றன.

இவை முன்னாள் அதிபர் நாதன் பற்றிய கவிதையில் நிகழ்ந்தவை.

கருத்துகள் இல்லை: