புதன், 3 ஆகஸ்ட், 2016

வானவரம்பன்

வானம் + வரம்‍பன் :   வானத்தை எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்தவன்;  வானவரம்பன்.  உயர்வு நவிற்சி.  விரிந்த அரசு என்பதாம்.

வானவர் +  அன்பன் :  வானவர் என்று அறியப்பட்ட ஆட்சியாளர்களுடன்
நட்பாய் இருந்த அரசன்.  இதுபின் வானவரம்பன் என்று மாறிற்று என்கின்றனர்.

வன வரம்பன் என்பது வான வரம்பன் என்று திரிந்தது ?


வானவர் அல்லது தேவர்கள் போலும் திறமுள்ள அம்பினைத் தான் வைத்திருந்தவன்:  வானவர்+ அம்பு+ அன் =  வானவரம்பன்!!

அரம்பு என்பது குறும்பு என்றும் பொருள்தருவது.
வான + அரம்பு + அன் = வானவரம்பன் என்றும் வருதலும் உண்டு.
அப்படியானால் உயர்ந்த குறும்புகள் செய்வோன், அதிகமான குறும்புகள் செய்வோன் என்றும் பொருள் தரும். ஆனால் இது வரலாற்றுடன் பொருந்தவில்லை! இப்பட்டம் தாங்கிய அரசர்கள் நல்லவர்கள் என்றுதெரிகிறது.


உங்கள் கருத்தையும் பதிவு செய்யலாம்.

Edited


கருத்துகள் இல்லை: