வியாழன், 4 ஆகஸ்ட், 2016

இரேணுகாதேவி பொதுமைக் கடவுள்

முருகு என்றால் தமிழில் இளமை, அழகு என்றெல்லாம் பொருள்தரும். இதைப்பற்றி எழுதப்பட்ட நூல்கள் பல, சிலவற்றை நாம் படித்திருக்கிறோம்.
இயற்கையெல்லாம் அழகுதான். முதுமையும் இளமையும் மாறிமாறி வருகிறது. ஓர் இளம் மாந்தனே ஒருத்தியைத் திருமணம் செய்து இருவரும் ஒரு பிள்ளையைப் பெறுகிறார்கள்.  ஆக முதிர்ந்த இருவரிடமிருந்து இளமை தோன்றுகிறது. மரம் செடி கொடி எல்லாம் அப்படித்தான். எனவே உலகில் முதிர் சிவத்திடமிருந்து இளம் முருகன் தோன்றுவதென்பது இயற்கைக்கு மாறானதன்று. உண்மையில் முதுமையென்றும் இளமையென்றும் வேற்றுமை ஒன்றுமில்லை. இவை ஒரே பொருளின் வெவ்வேறு நிலைகள். அன்று ஊமைப் பெண்ணாகவும் இன்று பாடும் பெண்ணாகவும் இருப்பது ஒரே பெண்ணின் வெவ்வேறு நிலைகள்.  சிவமும் முருகும் ஒரே இறைமையின் Divinity வெவ்வேறு நிலைகள். பொருள்கள் பலவாயினும் தன்மை, இயக்கம், தொடக்கம், முடிவு எல்லாம் ஒரே மாதிரி செல்கின்றன.

கடவுள் என்பது எல்லாம் கடந்ததாயினும், எல்லாவற்றிலும் உள்ளதாகும்.
இதில் ஒரு மாறுபாடு காணலாம். வேறுபாடு ஒன்றுமில்லை என்று கண்டுகொண்டால் கடவுளை உனர்ந்துவிட்டோம் என்று பொருள். இதற்கு
நம் பகுத்தறிவு நமக்கு உதவும்.

கடவுள் யாவர்க்கும் பொது என்பதை உணர்த்தவே, வெட்டியாரப் பெண்ணின் தலையும் இரேணுகா தேவியின் தலையும் மாற்றி ஒட்டப்பட்டதாக நம் தொன்மக் கதைகள் கூறுகின்றன. இரேணுகாதேவி  தீட்டு என்பதை விலக்கிய கடவுள்.  பொதுமைக் கடவுள். சமதர்மக் கடவுள்.

எப்படிச் சொன்னால் மக்களுக்கு எளிதில் புரியவைக்கலாம் என்று சிந்தித்த தொன்ம  ( புராண )  ஆசிரியர்கள், இப்படிக் கூறிமுடித்தனர். இரேணுகா ஒரு தேவனை விரும்பியதும் முனிவனை மணந்ததாகவும் உள்ள‌ கதை, கடவுள் அல்லது தேவி, மனிதனை விரும்புகிறார், விரும்புகிறாள் என்று பொருள். விரும்பவில்லையாயின் எல்லாருடைய கதையையும் ஒரே ஆட்டாக பூமியை ஆட்டி அழித்திருப்பார் அல்லரோ?  அவள், அவன், அது  என்றெல்லாம் நாம் கடவுளை குறிப்பதற்குக் காரணம் நம் மொழியில் , பேச்சில் எழுத்தில் உள்ளில் உள்ள குறைபாடு. கடவுள் பெயரிலி, ஒரு நாமமும் இல்லாதவன். அவனுக்கு எந்த நாமம் இட்டாலும் அது திருநாமம் தான்.  திருவிற்கு இட்ட நாம் திரு நாமம்  ஆகிவிடும் .

அன்றை  அரசுக்கு  சாதிப்  பகுப்புகள் தேவைப்பட்டன.  நெடிது அரசு செலுத்த
மக்களைப் பிரித்தாளுவது அரசனுக்குத் தேவை  கடவுளுக்குத் தேவை இல்லை. மக்களைப் பிரித்துச் சாதிகளை உண்டாக்கியதில் கடவுளுக்குக் கிட்டிய ஊதியம்தான் என்ன?  மேலும் சாதிகள் கடவுளுக்குத் தேவைப்பட்டிருந்தால் உலகில் எல்லா நாடுகளிலும் ஏன் ஏற்படுத்தவில்லை?  இந்தியா மட்டும்தான் கிடைத்ததோ?  ஆகவே கடவுள் ஏற்படுத்தினார் என்று எழுதிவைத்தது, அற்றை அரசியலார் ஏற்பாடு. அவர்கட்கு தெய்வச் சேவை புரிந்த பிராமணர்கள் இதை எதிர்க்கும் வலிமை இல்லாதவர்கள்.  எதிர்ப்பதால் பிராமணர்க்கும் தொல்லையே அன்றி நலம் விளையாது. இறைவன் விட்டவழி என்று இருந்து  விட்டனர்.  " சாதிகள் இல்லாத சமுதாயம்" என்ற பழைய  தமிழ் நேசன்   தாளிகைக்கட்டுரை இதை நன்கு விளக்கியது.

வெள்ளையர் வந்து இந்தியாவைப் பார்க்கையில் பல சாதிகளைக் கண்டனர். இது போன்ற விரிவான பழந்தொழிலடிப்படைக் கட்டுகள் அவர்கள் நாட்டில் இல்லை. பெருமகன்  Lords, பொதுமகன் Common(s) என்ற பிரிவு இருந்தது,  தீட்டு முதலியவை இல்லை.இந்தியா  பிளவு பட்ட நாடு,  நெடுங்காலம் நல்லபடியாக ஆளலாம் என்று அமர்ந்துகொண்டனர். அதாவது, அரசியலுக்கு அது நல்லது என்று அவர்களுக்கும் தெரிந்தது. Well if  there is opportunity, facility, right in front of you,  you  as a politician or ruler would be damn stupid if you throw it away and lose the benefits........ They were not concerned with idealism.  They were concerned with practicalities, இவர்களெல்லாம் எப்போதும் ஒன்று சேரமாட்டார்கள். ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பதைக் கண்டனர். சாதிக் கட்டுக்களை  மாற்றாமல் வைத்துக்கொண்டனர். சாதிகள் இருந்தால் நல்லது, அதனால் வெள்ளையர்க்குத் தீமை ஒன்றுமில்லை.  இதை ஏற்படுத்திய பண்டை இந்திய அரசுகளை அவர்கள் மனத்தினுள் பாராட்டியிருப்பார்கள்.

அம்பேத்கார்கூட, சாதிகள் மூலம் கீழ் நிலை மக்கள் எப்படிப் பயன்பெறலாம் என்று ஆய்ந்து, அவைகளை வைத்துக்கொண்டாரே!  அப்புறம் ஏன் ராஜ ராஜனை  யெல்லாம் குறைகூறவேண்டும்?

இவற்றையெல்லாம் நோக்க, ஒரு கடவுளின் தலையும் ஒரு வெட்டியான் தலையும் ஒன்றுக்கு மற்றொன்று நிகர்  என்று எழுதிவைத்த தொன்ம உரைஞன் (புராணீகன்) பெரிய சீர்திருத்தவாதியல்லனோ? யாம் போற்றுவோம்.


The flaw if any  in paragraphing and justification of this material is inherent in the  format mechanism  of the post. We have tried our best but could not better the same further than this.  "Justify" feature has been tried. Manual regroup has been tried too.   Sorry about it. This will  also apply to other posts, wherever applicable.  We do not know how this displays in your  screen.  It does not look too good in ours.

கருத்துகள் இல்லை: