செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

மணியைத் திருப்பிவைக்க இயலுமோ?


(புதுக்கவிதை )

மறதியால்   விளைந்த கேடு
மாநிலமேல்  ஒன்றா இரண்டா?

அலுவலகம் அடைத்தபின்,
அன்புள்ள என் வேலைத்தோழி
குலுங்கிச் சிரித்துக்கொண்டு
கூடவே வந்தாள்

அமர்ந்தாள்  என் உந்தில்.
அசத்தும் கதைகள் பேசிக்கொண்டே
அவள் வீடு  நோக்கி
முதலில்  ஓட்டினேன்  .
ஒரு பதினைந்து கல்தொலைவு சென்றபின்
இறங்கி அவள் வீடு  நோக்கிப்  போனாள் ..

அப்புறம் ஒரு பத்துக்
கல் தொலைவு.  ஓட்டினேன் .
என்  கைப்பேசி மணி அடித்தது.

"என் வீட்டுத் திறவுகோலை
அலுவலகத்தில் வைத்துவிட்டேன்  " என்றாள்.
"வெளியில் நிற்கிறேன்
"கதவு  திறக்க  நீங்கள்
உதவ வேண்டும் "  என்றாள்


அடி பாவி !
செய்யும் காரியத்தில்
சீரான கவனம் வேண்டாமோ?
உலகில் பலர் இப்ப்டி?
இப்ப்டிப் பெண்ணை எப்படி  ஏசுவது?

ஒரு மூன்று மணி நேரம்.
மீளாது ஒழிந்தது ....
பணமே  தேடினும்
மணியைத் திருப்பிவைக்க இயலுமோ?  *

----------------------------------

நேரம்  கழிந்தால் கழிந்ததுதான் காசைத்தான் 
யாரும் பெறல்மீண்டும் ஆம் !           (  நம்  குறள்  )


------------------------------------------------

பல மணி நேரம்  பாழான  நேர்வு 
பைந்தமிழ்ப்   பாடவும் ஏலாத சோர்வு ,


edited.  10.9.2016

கருத்துகள் இல்லை: