சனி, 6 ஆகஸ்ட், 2016

அஞ்சிவாழும் சிறுமீண்கள்

அஞ்சிவாழும் சிறுமீண்கள்  அலைகடலிற் பலவே
அவைதம்மை மிரட்டிவைக்கும் பெருமீன்கள் உளவே!
பஞ்செனவே பறந்தொளியும் நிலைமேவும் குஞ்சுப்
பறவைகளை பரமன்வந்து பாதுகாத்தல் அரிதே
நெஞ்சகமே திடம்கொண்டு நிமிர்நின்ற போதும்
நேற்றுவரை  நின்றதெல்லாம் இன்றோழிந்த துண்டே
துஞ்சுங்கால் துஞ்கெனவே துயர்மறந்து வாழத்
தோன்றியவர் புகழ்காண்பர்  பிறர்க்கில்லை ஞாலம்.

கருத்துகள் இல்லை: