வியாழன், 11 ஆகஸ்ட், 2016

நீட்டி எழுதினால் கதை ஆகிவிடும்.....

அடி ஆசோ!  நீ காயவைத்த துணிகள் கம்பிக்கட்டுடன் சாய்ந்துவிட்டனவே! உனக்குத் தெரியவில்லையா?  வந்து கம்பிக்கட்டினை நிமிர்த்தி வை,  என்ன ஓர் ஒலியையும் காணோம்.   அப்படி ஆழ்ந்த தூக்கமா,,,,( பதிலொன்றும் இல்லை)   என்ன, வீட்டுக்காரியா பணிப்பெண்ணா....வெளியிலே எட்டிப்பார்...."  என்று ஒரு கிழவியின் குரல் சீனமொழியில் ஒலித்தது.

இவள் என்ன சாதியோ, நான் என்ன சாதி....நான் ஏன் அக்கறைப் படவேண்டும்... என்று நினைக்கவில்லை. எல்லாரும் மக்கள்தாம்.
உனக்கு இடர்   ஒன்று என்றால் நான் முடிந்தால் உதவுவேன்...என்னால் முடிந்த அளவு.

இதுதான் சிங்கப்பூர் மக்களின் அன்புநிலை. பாசவலை. ஆக்க உலை.

நான் கொஞ்ச நேரம் கழித்து வெளியிற் சென்று பார்த்த போது,  துணிக்கம்பிக்கட்டு  காற்றினால் சாய்ந்து துணிகள் தரையை முத்தமிட்டுக்கொண்டு கிடந்தன. காய்ந்துவிட்டன; அவற்றை அகற்றி
மடித்து வைத்துவிட்டேன்.

இது மலேசியாவாக இருந்து, எந்தக் கிழவியாவது கூப்பிட்டிருந்தால்,
நல்லபடி பார்த்துத்தான் கதவைத் திறக்கவேண்டும்.  வெளியில் திருடர்கள் ஒளிந்துகொண்டிருந்து, கதவைத் திறந்தவுடன் உள்ளே பாய்ந்து
என்னைக் கட்டிப்போட்டிருப்பார்கள். பெரும்பாலும் இந்தியர்களே திருடர்கள்.
வேலையில்லாமல் திருடுவோரும்  வேலையாகத் திருடுவோரும் மிகுதி,

பிலிப்பீன்ஸில் எச்சரிக்கை.

இந்தியாவின் நிலை என்ன?  சிற்றூராய் இருந்து, சாதிக்காரனாய் இருந்தால்
உதவுவான்.  நகரங்களில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தொலைக்காட்சிக்காரர்கள் துளைத்து எடுக்கிறார்கள். ஆகவே தெரியவில்லை.

நீட்டி எழுதினால் கதை ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை: