செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

திலோத்தமை

அரம்பை என்ற சொல் அமைந்ததெவ்வாறு என்று ஆய்ந்தறிந்த நாம்  http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_19.html இனி, திலோத்தமை அவள் பெயரை யாங்குப் பெற்றாளென்பது  துருவியறிந்து மகிழ்வோம்.

திலகம் என்ற சொல், உண்மையில் துலகம் என்பதன் திரிபு எனபது முன்னர் கூறப்பட்டது.    https://sivamaalaa.blogspot.sg/2014/06/blog-post.html

துல >  துலங்கு. கு : வினையாக்க விகுதி;    துல :  அடிச்சொல்.

பண்டைமக்கள் பொட்டு இட்டு அவனருட் பெற்று முகவழகுடனும்  ஆன இலக்கணங்களுடனும் இலங்கினால்  வீடும் துலங்கும் என்று நம்பினர்.  ஆதலின்  பொட்டு  இடும் வழக்கம் உண்டாயிற்று.அதற்குத் துலகம் என்ற சொல்லும் ஆக்கப்பெற்று, அது திலகம்>  திலக் என்றெல்லாம் "மெருகூ"ட்டப்பட்டது.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது யாதெனில், து> தி  திரிபு.

இதே வழியைப் பின்பற்றி,  திலோத்தமாவிற்கும் பெயர் புனையப்பெற்றது.

அவள் யார்?  துலங்கும் உத்தமி!   எனவே அவளுக்கு துல+ உத்தமை என்ற பெயர் புனைவுற்றது.

துல + உத்தமை >  துலோத்தமை > திலோத்தமை.1

துலங்கி முன்னிருப்பவள்.   உ> உ + து + அம்+ இ./ ஐ.

அவளுக்குப் பெயர் தந்ததும் தமிழே ஆகும்.



-----------------

1 இது வடமொழிச் சந்தி என்பர் . மூலங்கள் தமிழ் .

கருத்துகள் இல்லை: