வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்

அத்தல்  பிகாரிவாஜ் பாய்தலைவர் ;   அந்நாட்டின்
எத்திசையும் போற்றும் இணையற்ற --- உத்தமரே
மெல்லெனும் பேச்சில் மிடுக்கற்ற  மேல்நடப்பில்
சொல்லன்ன செய்துமுடிப்  பார்.

தொண்ணுற்று மூன்றில் தொலைவுலகு சென்றதனை
எண்ணினும் நெஞ்சம் நெகிழுமே --- பெண்ணொன்று
தன்வளர்ப்பு நன்மகளாய்த்   தான்கொண்டார் நாட்டிற்குப்
பொன்வளரப்  பாடுபட்   டார் .     

கருத்துகள் இல்லை: