ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

பதவேறுபாடுகள்.

சில சொற்களை நாம் சில வடிவங்களில் எழுதலாமே. ஒரு சொல்லை ஒரே மாதிரியே எழுதுபவரா நீங்கள். அப்படிக் கட்டப்பட்டு எழுதாமல் இட்டப்படி எழுதப் பழகிக்கொள்வது நல்லது.

மனத்தை எ ங்கு எதிலே ஈடுபடுத்துகிறீர்களோ , எதில் உங்கள் மனம் ஈடுபடுகிறதோ அதுவே உங்கள் இட்டம்.

இந்தச் சொல் வடிவங்களைக் கவனிக்கவும்:

இடு  > இடுதல் ( வினைச்சொல் - தொழிற்பெயர்).
இடு > ஈடு:  இது முதனிலை ( எனில் முதலெழுத்து) நெடிலாகித் திரிந்த தொழிற்பெயர்.
ஈடுபடு > ஈடுபாடு.
 இடு+அம் = இட்டம்.  ( இதில் டகரம்  ஒற்று இரட்டித்தது).

மெருகூட்ட:  இட்டம் > இஷ்டம்.

மற்ற பதங்கள் ஒப்பு நோக்க:

கடு >    கட்டம்  மற்றும் கட்டு> கட்டம்;   ( மெருகு:  கஷ்டம்)
குட்டை > குட்டம்.  அடிச்சொல் :  குடு ( குட்).   (குஷ்டம்).

இனிச் சில வடிவங்களை நாம் வழக்குக்குக் கொண்டுவரலாம்.

நல்லவர் என்ற சொல் இடைக்குறைத்து நலவர் என்றுமெழுதலாம்.  ஆனால் இத்தகைய வடிவங்கள் கவிதைக்குப் பொருத்தமாக இருக்கும்.

வல்லவர் > வலவர்
நல்லவர் > நலவர்.
சொல்லவர் > சொலவர்.

 நல்லவன் > நல்லன் > நல்லான் எல்லாம் பயன்படுத்தலாம்.

தமிழில் பல வசதிகள் உள்ளன.

கருத்துகள் இல்லை: