வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

வான்மீதிலே இன்பத் தேன்மாரி: இராமராவின் மெல்லிசை.

நாம் இன்னும் தமிழ்மொழியைப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் எம் போன்றோர் வெளிநாட்டினர்.  தமிழைத் தாய்மொழியாகப் போற்றும் நாட்டில் அல்லது மாநிலத்தில் வாழவில்லை. வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் சீரகம் சோம்பு பட்டமிளகாய் தாளிப்பு வகையறாக்கள் விற்கும் கடைக்குப் போனால்தான் தமிழ்ப் பேச வாய்ப்புக் கிட்டுகின்றது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நாம் வெளியில் சந்திப்பவர்கள் 99 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் அல்லது சீனர்கள்.  ஆங்கிலம்,  சீனம்,  மலாய் முதலிய மொழிகள் பெரிதும் பயன்படுகின்றன.

நம்மில் பலர் தமிழை அறிந்து வைத்திருப்பதற்குக் காரணம் பேரளவில் திரைப்படங்களையே சாரும். திரையரங்குகட்குச் சென்று படங்களைப் பார்க்காவிட்டாலும் தமிழ்த் திரைப்பாடல்களை ஆங்காங்கு வானொலி தொலைக்காட்சி வாயிலாகக் கேட்க முடிகிறது. இது ஊட்டச்சத்தினை உட்கொண்டது போலாகும். சற்றுத் தரம் தாழ்ந்த திரைப்படங்கள் வருவதைக் கருத்தில்கொண்டு  அவற்றில் நாம் விரும்பும் பண்பாட்டுக் கூறுகள் குறைந்துகொண்டு செல்வதனால் பரத நாட்டியம் பழைய இசை (கர்நாடக சங்கீதம் ) முதலியவற்றைக் கற்றறிய ஒரு சாரார் செல்வதும் வரவேற்றற்குரியதே ஆகும். கோவில்களிலும் ஓரளவு தமிழ் வழங்குகிறது. கிறித்தவ தேவாலயங்களிலும் தமிழ் போற்றப்பட்டு வருகிறது.

திரைப்பாடல்களில் பல இனிய மெட்டுகளிலமைந்த மெல்லிசைப் பாடல்கள் நம் மனத்தைவிட்டகலா இடத்தினைப் பிடித்துக்கொண்டுள்ளன. அத்தகைய பாடல்களிலொன்றுதான் "வான்மீதிலே' என்ற பாடல்.  பானுமதி ஆண்பாடகருடன் இனிமையாக வழங்கியது இப்பாடல்.

அண்மையில் இரண்டு குருசாமிகள் எம்மைக் காண வந்தனர்.  தேநீர் (கொழுந்துநீர்)  முறுக்கு முதலியவை கொண்டு பணிவன்பு தெரிவிக்கப்பட்ட பின்பு அவர்கள் இந்தப்பாடலைப் பற்றிப் பேசி அதை எம்மைப் பாடும்படி கேட்டனர். யாமும் இயன்றவரை இதைப் பாடினோம்.

வான்மீதிலே இன்பத்
தேன்மாரி பெய்யுதே;
வண்ணம்சேர் கலாமதி
வீசும் வெண்ணிலாவினில்   (வான்)

சுகாதீத மேவும்
அனுராக கீதம்
சுதியோடு பாடும்
மதுவண்டு கேளாய்.
சதாநந்த ஜீவிய கானம் இதே (வான்)

வசந்தத்தில் ஆடும்
புனர்ஜென்மம் நீயே
மையல்கொண்டு நாடும்
தமிழ்த் தென்றல் நானே

மனம் ஒன்று சேர்ந்தே
உறவாடும் போது ( I stopped here)
நிஜம்தான் என் ஆருயிர்)
மெய்வாழ்வு நான்)
எனை ஈன்ற ? போகமும்)
மோகமும் மாறாது.)

BRACKETED LINES  IN DOUBT. supplied by the swamis
I tried to elicit the lines from youtube but owing to
frequent reloading unable to retrieve them.

இதை அவர்களுக்காகப் பாடினேம். இதை யாம் கேட்டிருக்கிறோமே அன்றிப் பாடிப் பயிற்சி செயததோ அடிக்கடி பாடியதோ இல்லை;  வரிகளும் சரியாகத்
தெரியவில்லை என்றேம். இருந்தாலும் நன்றாகப் பாடியதாகத் தெரிவித்தனர்,
மணிப்பவழ நடையில் (  மணிப்பிரவாளம் ) அமைந்த நல்ல பாடல். பலரையும் கவர்ந்தது ஆகும்.  ( நீங்கள் அறிந்திருந்தால்,  இப்பாடலின் வரிகளை இங்கு பின்னூட்டம் இடுங்கள். மேலே தரப்பட்ட வரிகளில் தவறுகள் சில இருக்கலாம் என்று நினைக்கிறேம்  ).

இந்தப் பாடலுக்குத் திரையில் பானுமதியும் மறைந்த ஆந்திர முதல்வர் ராமராவும் நடித்திருந்தனர்.  அண்மையில் அவர் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் காலமானது நம்மைச்  சோகத்துள் உய்த்தது. அவர்கள் குடும்பத்தாருக்கு நம் இரங்கல் உரித்தாகுக,  இருவரின் நினைவாகவும் இப்பாடல் உள்ளது.

திருத்தம் பின்


கருத்துகள் இல்லை: