ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

சுமங்கலிப் பூசையில் பெருந்திரள்.



சுமங்கலிப்பூசைக்கு முன் கூடியிருந்த மக்கள் திரள் இங்குக் காணலாம்.
இந்த ஆண்டு இப்பூசையைக் கோவிலே ஏற்று நடத்திடினும், துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்கள் ( இது பூசைக் குழுவினர் பெயர் )  நல்ல பொருட்செலவில் பூசைக்குரிய மலர்கள், மாலைகள், பழங்கள், இனிப்புப் பண்டங்கள்,  அம்மன் மற்ற தெய்வங்கட்கு அணிமணிகள் அலங்காரங்கள், கட்டுவதற்குப் பொன் தாலிகள், ஏனைத் துணைப்பொருட்கள், வரிசைப் பொருட்கள், பால்குடத்திற் பங்குபற்றுதல், சன்னிதிமுன் பங்கெடுத்தவர்கள் இருத்தற்கான தட்டுப்பொருட்கள் மஞ்சள் குங்குமம் முதலிய வழங்கிச் சிறப்பித்தனர். ஐயர்களுக்குத் தக்கிணைகளும் வழங்கப்பட்டன.

அம்மன் தாலிகட்டிக்கொண்டதைப் பலர் கண்டு மகிழ்ந்தனர்.

அன்னதான நேரத்திற்குக் கூட்டம் குவிந்துவிட்டதென்று மக்கள் பேசிக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை: