ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

மனிதனை விலங்குபோல் படைத்துள்ளார்.

மனிதத் தசையூண் மலைப்பாம்பு ---பூவின்
மதுவுண்ட வண்டாய் மயங்கியதே;

இனிதித் தசையே எனவிழுங்கி ---- ஓர்

எண்ணைந்  தடிக்குள் உறங்கியதே.



இவனுக் குணவாம் விலங்குகளே --- இவன்

எவ்விலங் கினுக்கும் உணவாகுவான்;

இவற்கும் அவற்றுக்கும் வேறுபாடு ----- உண்டோ

இறைவன் படைப்பினில் கூறுபாடு.



மாந்தனை நீயுண்க என்றுசொன்னான் ---பல

மாக்களும் பின்பற்றி வந்துள்ளன;

வாழ்ந்திட மாந்தனே உண்மாவினை --- என

மாந்தனும் வாழ்ந்திடப் பின்பற்றினான்.



ஆய்ந்திடில் மாந்தனுக் கென்ன இடம்--- அவன்

அருந்தலை மைக்கிங்  கறிகுறியோ  

சேர்ந்தெழுப் பிட்டதோர்  கூக்குரலால் ---- இவன்

சீர்பெற்று மேலான தெப்படியோ?

மா = விலங்கு
உண் மா =   விலங்குகளை உண்.


மலைப்பாம்பு விழுங்கிய பெண் கதை. சொடுக்கி வாசிக்க:

மேற்குறித்த செய்தியைப் பாருங்கள். மனிதன் 
விலங்குகட்கு உணவு.  விலங்குகள் மனிதர்க்கு 
உணவு. எல்லாம் இறுதியில் அழிவை எய்துவதும்
படிப்பகர்ப்புகளை உண்டாக்கிக்கொள்வதுமாகவே
உள்ளன. இந்தக் கவிதை இதனைச்  சிந்திக்கிறது.
மனிதன் எப்படி விலங்கினும் மேலானவன் என்று 
சொல்லிக்கொள்கிறான்.

மனிதன் தன் இயல்பினாலும் கடவுள் கட்டளையாலும்
மேலானவன். அப்படியானால் பல நிகழ்வுகளில் 
மனிதனுக்கு ===  குழந்தைக்கும் வளர்ச்சி 
பெற்றவளுக்கும் உள்ள வேறுபாடு ஏன் தெரியாமல் 
போனது? ஆட்டினுடன் ஏன் 
வன்புணர்வில் ஈடுபடுகிறான்?

மனிதனும் ஒரு விலங்கு அல்லனோ? மனிதன் 
தற்பயிற்சி மூலமாகவும் சிந்தித்ததன் மூலமாகவும் 
வேறுபாடுகிறான். மற்றபடி அவனும் விலங்குதான்.

உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். 

Previews failed to load.  Impedes editing. Read with necessary
corrections as you deem fit until we are able to edit. Thank you.




கருத்துகள் இல்லை: