புதன், 1 ஆகஸ்ட், 2018

சொல்லுங்கண்ணே........

சொல்லுங்கண்ணே :

இந்தத் தொடரைப் பிரித்தால் இப்படி வரும்:

சொல்லும் + கண்ணே :    இது கண்ணே சொல்லுவாய் என்று பொருள் தரும்.

சொல்லுங்க  + அண்ணே :   இது அண்ணனாகிய நீர் சொல்லுவீராக என்று பொருள் தரும்.

காள மேகப் புலவர் என்ற பெயரில் " காள "  என்பது கருப்பு என்று பொருள் தரும்.  வேறு சொற்களில் சொல்வதானால்  கருமேகப் புலவர்;  புலவர் கார்முகிலார் எனலாம்.  15ம்  நுற்றாண்டினர்  என்று கருதப்படுபவர். கருமேகம் மழை தருவது.  இவர் அதுபோல் பாக்கள் தந்தவர் . இயற்பெயரா என்று தெரியவில்லை .

சொற்களையும் தொடர்களையும் பிரித்துப் பல்வேறு பொருள் போதரும்படி பாடுவது இவரது சிறப்பாம்.

சில+ எடு +ஐ =  சிலேடை :   ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் எடுத்தல்.  சில = ஒன்றின் மிக்கவை.

கருத்துகள் இல்லை: