வியாழன், 30 ஆகஸ்ட், 2018

வாபஸ் எப்படிப் பரவியது?

வாபஸ் : இந்தச் சொல் தமிழர் எல்லோரும் அறிந்தது.  பெரும்பாலான தமிழ்நாட்டு வாசிகள் உருது மொழியைப் பேசவில்லை. இவர்கள் முஸ்லிம் அரசு அதிகாரிகளுடன் எத்தகைய தொடர்பு வைத்திருந்தனர் என்பதும் அறியோம். முஸ்லிம் அரசு நடைபெறாத தமிழ் நாட்டின் பல பகுதிகள் இருந்தனபோல் தெரிகிறது. இத்தகைய சொற்கள் எப்படி வேகமாகப் பரவி எல்லாத் தமிழ்நாட்டு மக்களும் அறியுமளவிற்கு விரிந்தது என்பது தெரியவில்லை.

அந்தக் காலத்தில் எதையேனும் செய்துவிட்டு அடிக்கடி வாபஸ் பெற்றுக்கொண்டு இருந்தனர் போலும். இல்லையேல் வாபஸ் எப்படிப் பரவிற்று? முஸ்லிம் மக்கள் ஏனையோருடன் பேசும்போதிலெல்லாம் இதைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனரோ? வாபசுக்கு உரியதாய் இருந்தது எது?

எப்படியோ வாபஸ் என்ற சொல் நன்`கு பரவிவிட்டது.  காளமேகப் புலவர் இருந்திருந்தால் வாபஸ் என்பதைப் பிரித்து  பஸ் என்னும் பேருந்தை வாவென்று அழைப்பதுபோல் எந்தக் கவியாவது எழுதியிருப்பாரோ என்னவோ?

தமிழ்வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட எத்தனையோ புதிய சொற்கள் வழக்குக்கு வராமலே கிடக்க, வாபஸ் மட்டும் வெற்றிநடை போட்டுள்ளதே!

இவை இருக்கட்டும்.   இப்போது இச்சொல்லின் அமைப்பை அறிவோம்.

எதையும் பின்வாங்கப் பெறுதலையே வாபஸ் என்ற சொல் குறிக்கிறது.

பெறுதல் என்பதில் பெறு என்பதை வடவெழுத்துக்கள் எனப்படும் அயல் ஒலி எழுத்துக்களை வைத்து மறு அமைப்புச்செய்வதானால்:

பெறு > பெஸ் என்று புனையவேண்டும்.

று என்பதை மெருகேற்ற எப்போதும்  ஸ் அல்லது ஷ் பயன்பட்டுள்ளது.


எடுத்துக்காட்டு:  இறைவர் > இஷ்வர் > ஈஷ்வர். 
இறைவர் > இஸ்வர் > ஈஸ்வர் > ஈஸ்வரன்.

ற வுக்கும் அதன் வருக்கத்துக்கும் ஷ் அல்லது ஸ் வரவேண்டும்.
று வுக்கும் ஸ் போடவேண்டும்.

பெறு > பெஸ்.

பின்வாங்கு என்பதில் வாங்கு என்பதை வைத்துக்கொண்டால்:
இதற்கு ஓர் எழுத்துப் போதுமானது. அது  -வா-  என்பது.

வா+ பெஸ்  என்று இரண்டையும் இணைத்தால்  வாபெஸ் ஆகும். இதில் பெஸ் என்பது பஸ் என்றிருத்தலே சொல்லுக்கு எளிமை கூட்டும். இனிமையும் இருக்கும்.

வாபெஸ் >  வாபஸ்  ஆகிறது.
எகரம் அகரமாவது இயல்பே.

பின் என்பதை எப்படி விடலாம்?  அதையும் இணைத்தால்

பிவாபஸ்:  இது சரியில்லை. பி என்னும் பின் என்பதன் முதலெழுத்தை நீக்கி விடுதலே சரி.  பிவாபஸ் என்பது நீண்டதுடன் ஒலித்தடையும் உண்டுபண்ணும்.

வாபஸ்.

ஓர் உருதுச்சொல் உருவெடுக்கிறது.

உருவெடுத்த சொற்கள் இருந்தாலே உருது அமையும்.

வருவாயில் தா என்பதற்கு வாய்தா போல.

மிக்க மகிழ்ச்சி.

எல்லாமும் தமிழ் தானா? இது வெறியன்றோ ?

தமிழே இல்லாத கோடிக்கணக்கான சொற்கள் உலகிலே உண்டு.  அவற்றை நாம் தமிழ் என்றுசொல்லவில்லை.  எடுத்துக்காட்டு: மேகன்மார்க்கல். இதில் தமிழ் எதுவும் இல்லை.

----------------------------

இச்சொல் முன் வாபீசு என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றுஇவ்வடிவம் வழங்கவில்லை.


கருத்துகள் இல்லை: