வெள்ளி, 2 மார்ச், 2018

வெண்பா இறுதி: கன்றுநிலை மாறும் மாடு என்பது:

 ஒரு கவிதையில்:  " கன்றுநிலை காண்மாறும் மாடு"  என்று
முடித்திருந்தோம்.   அந்தக் கவிதை இங்கே இருக்கிறது:

http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_31.html

இதற்கான பொருள் யாது என்றார்க்கு இப்போது இங்கு
பொருளைத் தருகிறோம்.

இத்தொடரை,  மாடு கன்றுநிலை மாறும்,  காண்  என்று
முதலில் மாற்றிக்கொள்ளுவீர்.

பொருள்:

மாடு:  ஒரு வளர்ந்துவிட்ட பசுவோ (ஆவோ)  காளையோ;

கன்றுநிலை:  ஒன்றுமறியாத, எது தனக்கு நன்மை அல்லது
எது தனக்குத் தீமை என்று தெரிந்து செயல்பட முடியாத
நிலையில் இருத்தல்;  (  அப்படி இருந்தால் );

மாறும் :    அஃது  மாற்றமடையும்

காண் :   தெரிந்துகொள்வாய்,  என்றவாறு.

கன்று என்பதைப் பெயர்ச்சொல்லாக எடுத்துக்கொண்டால்:
இது மாட்டின் இளம்பருவத்தைக்  குறிக்கிறது,  எனவே
கன்று நிலை - அறியாமையுடன் இளம்பருவத்து
வீண்சேட்டைகளையும் உட்படுத்துகிறது.

கன்றுதல் என்ற வினையாக எடுத்துக்கொண்டால்:
வாட்டம், அடிபடும் நிலை,  கருகுதல், பிறர் இரங்கு
நிலை என்றும் பொருள்தரும்.  கன் என்ற அடிச்சொல்
கனல் என்பதையும் பிறப்பித்துள்ளது;  கன்று என்ற
வினையும் உண்டுபண்ணி யுள்ளது.  பொருந்துமாறு
உரைத்துக்கொளக. ஈண்டு  கன்றுநிலை
வினைத்தொகை ஆகும்.

மாட்டைப் பிறர் கண்டு சினக்கும் நிலை மாறும் என்பதும்
பொருந்தும். தொக்க உருபுகளை வருவித்துக்கொள்க.


கருத்துகள் இல்லை: