ஞாயிறு, 4 மார்ச், 2018

கண்டுபிடியுங்கள்,

சிந்திக்கவும் எழுதவும் படிக்கவும் நாம் கல்விச்சாலைகட்குப்
போகிறோம்.  நம் அகவைக்கு முந்தியவர்கள் எழுதிவைத்துள்ள
பலவற்றைப் படித்துத் தெரிந்துகொள்கிறோம். நாம்
தெரிந்துகொண்டவற்றுள் பலவும் புண்ணியமற்றவை.  எங்கள் பூகோள
( நிலநூல் )  ஆசிரியர் மிகவும் உழைப்பெடுத்து  பிரமபுத்திரா
நதி ஓடும் வங்காளதேச நிலப்பகுதியில் என்னென்ன விளைகிறது
என்று சொல்லிக்கொடுத்தார்.  இதைப் படித்து மனப்பாடம்
செய்து பரீட்சை எழுதினோம்.  வெற்றியும் அடைந்தோம்.
சான்றிதழ் பெற்றதால் பல்கலைக்கழகம் போனோம்,  அப்புறம்
இன்னொரு தேர்வு.

இந்தக் கட்டுரைப்பகுதியில் வந்துள்ள சொற்கள் சிலவற்றுக்கு
எப்படி அமைந்தன என்பதைக் கண்டுபிடித்துக் கூறுங்கள்:

சிந்தித்தல்:

சாலை:

அகவை:

பூக்கோளம் மற்றும் பூகோளம்.

பரீட்சை.

ஆசிரியர்.

வெற்றி

 

கருத்துகள் இல்லை: