வியாழன், 1 மார்ச், 2018

இறப்பும் பிறப்பும்





இறப்பும் பிறப்பும் இயல்புதான் என்பார்
உரையிஃ   துளமையென் றாலும்----உரைக்கினோ
சாவறிந்தக் கால்நெஞ்   சதிருமே  செய்பவைபின்
மேவிட  ஓரிரு  நாள்.

அரும்பொருள் உரை:

உரை யிஃது ---  இந்த வாக்கியம்;
உளமை --- உண்மை;
மேவிட --- தொடர்ந்து செயல்படுத்த.
ஓரிரு நாள் ---  ஒன்று அல்லது இரண்டு நாட்கள்
ஆகும் என்றபடி. 

கருத்துகள் இல்லை: