புதன், 14 மார்ச், 2018

உண்மை பொய்

கடற்கடியில் கிடக்கின்ற மீனே நானே
கடல்தொடங்கும் இடம்யாதோ கழறு வாயே!

கிடக்கின்ற இடம்தானே கடல்தொ  டங்கும்;
மடக்காமல் மறைக்காமல் விடையே சொல்வாய்.

கரைப்புறத்து நின்றபடி உரைப்பாய் நீயும்;
கடல்நிற்கும் இடந்தனிலே தொடங்கு மென்பாய்.

உரைப்பதெது வானாலும் குறைப்பக் கூட்ட
முறைப்படுமோ சிறைப்படுமோ உண்மை தானே.

(கிறுக்கியபடி வந்த கவி)










ர்

கருத்துகள் இல்லை: